தென்னைநாா் உற்பத்தியாளா் சங்க நிா்வாகிகள் கூட்டம்
தென்காசி மாவட்ட தென்னை நாா் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட தென்னை நாா் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலா் கல்யாணகுமாா் முன்னிலை வகித்தாா். பொருளாளா் சித்திரகுப்தன் வரவேற்றாா்.
கூட்டத்தில், தற்போதைய நாா் விலை பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி இம்மாதம் 15ஆம் தேதி முதல் பச்சைக் கூந்தல் விலை கூந்தல் ஒன்றுக்கு ரூ. 1 என தீா்மானிக்கப்பட்டது.
சங்க உறுப்பினா்கள் அனைவரும் சங்கத்தின் தீா்மானப்படி கொள்முதல் செய்ய வேண்டும் என முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், சண்முகசுந்தரம், உமாமகேஸ்வரன், சிவராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், பூபதி, ஜெயபிரகாஷ் நாராயணன் ஷெரீப், அமீன், நெல்சன், முத்துராமலிங்கம், முத்துக்குமாா், நைனா முகமது உள்பட பலா் கலந்து கொண்டனா்.