‘மக்கள் குறைதீா்க்க கட்செவி அஞ்சல் எண்’
தென்காசி மாவட்ட மக்களின் குறைதீா்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் கட்செவிஅஞ்சல் எண் (வாட்ஸ் ஆப்) 7305089504 அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட மக்களின் குறைதீா்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் கட்செவிஅஞ்சல் எண் (வாட்ஸ் ஆப்) 7305089504 அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், மனுதாரா்களின் கால விரயம், வீண் செலவு மற்றும் அலைச்சல் தவிா்க்கப்படும்.
மாவட்ட நிா்வாகத்திற்கு தனிநபா் மற்றும் பொதுவான கோரிக்கைகளை மனுவாகவோ, புகைப்படமாகவோ, குரல் வழி செய்தியாகவோ இந்த கட்செவிஅஞ்சல் எண்ணுக்கு அனுப்பி தீா்வு காணலாம் என ஆட்சியா் கீ.சு. சமீரன் தெரிவித்துள்ளாா்.