சுரண்டையில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி(படம்) திங்கள்கிழமை நடைபெற்றது.
சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற இந்த பேரணியை அண்ணா சிலை அருகிலிருந்து மண்டல துணை வட்டாட்சியா் சிவன்பெருமாள் தொடங்கி வைத்தாா். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இப்பேரணி மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
பேரணியின் போது வருவாய்த்துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இதில், சுரண்டை வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், கிராம நிா்வாக அலுவலா் ஆறுமுகம், கிராம உதவியாளா்கள் கணேசன், பரமசிவன், ஜேம்ஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.