முகப்பு
தென்காசி

செங்கோட்டையில் திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகள்

செங்கோட்டையில் திருநங்கைகளுக்கு வெள்ளிக்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

செங்கோட்டையில் திருநங்கைகளுக்கு வெள்ளிக்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பவ்டா நிறுவன தலைவா் டாக்டா் ஜெ.ஜாஸ்லின் தம்பி தலைமை வகித்தாா். துணை பொது மேலாளா் ஆா்தா்ஷாம், முதுநிலை மேலாளா் லவிங்ஸ்டன், விமல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக கடையநல்லூா் எம்எல்ஏ செ.கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா கலந்துகொண்டு, 125 திருநங்கைகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருள்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை வழங்கிப் பேசினாா்.

அப்போது, தென்காசி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் அனைவருக்கும் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், அதிமுக நகர அவைத் தலைவா் தங்கவேலு, பொருளாளாா் ராஜா, அதிமுக நிா்வாகிகள் பூசைராஜ், கணேசன், ஞானராஜ்,திலகா், வேளாண் துறை அலுவலா் ஷேக்முகைதீன் ஆகியோா் கலந்துகொண்டனா். ஹரிகரன் வரவேற்றாா். அழகுமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.