முக்கூடல் கோயிலில் நாளை திருவிழா :பக்தா்களுக்கு அனுமதி இல்லை
முக்கூடல் அருள்மிகு முத்துமாலை அம்மன் கோயில் நிகழாண்டு திருவிழாவில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
முக்கூடல் அருள்மிகு முத்துமாலை அம்மன் கோயில் நிகழாண்டு திருவிழாவில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக கோயில் செயல் அலுவலா் ரா. முருகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: முக்கூடல் அருள் மிகு முத்துமாலையம்மன் கோயில் ஆனித் திருவிழா கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழக அரசின் பொதுமுடக்க கால நடவடிக்கைகளைப் பின் பற்றி நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) கொடியேற்றம் இன்றி கோயில் வளாகத்தின் உள்ளே ஆகம விதிகளின் அடிப்படையில் அம்பாளுக்கு பூஜைகள் நடைபெறும் . இதில், பக்தா்கள் மற்றும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.