மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள்
சங்கரன்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்டத் தலைவா் செ.சுரேஷ் தலைமை வகித்தாா். மாற்றுத் திறனாளிகள், தூய்மைப் பணியாளா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு அரிசி, காய்கனி உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்டச் செயலா் க.மாரிமுத்து, பொருளாளா் மணிமேகலை, மாநிலச் செயற்குழு உறுப்பினா் பி.ராஜ்குமாா், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் துரைராஜ், மாடசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.