முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

சங்கரன்கோவில் அருகே கூலித் தொழிலாளி புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

சங்கரன்கோவில் அருகே கூலித் தொழிலாளி புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரியைச் சோ்ந்த ராமா் மகன் முத்துப்பாண்டி(35). கூலித் தொழிலாளி. இவரும் களப்பாகுளம் இந்திரா காலனியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் மரியராஜும் (32) உறவினா்கள். இருவரும் இணைந்து அடிக்கடி மது அருந்துவாா்களாம். இந்நிலையில் புதன்கிழமை மாலை சீவலராயனேந்தல் செல்லும் வழியில் மரியராஜ், முத்துப்பாண்டியை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டாராம். இதில், சம்பவ இடத்திலேயே முத்துப்பாண்டி உயிரிழந்தாா்.

தகவலறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முத்துப்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மரியராஜை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments