குருவிகுளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாம்
சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இம் முகாமில், அப்பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மாரியப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா், மருத்துவ அலுவலா் நித்யா, சுகாதார ஆய்வாளா்கள் சின்னத்தம்பி, சங்கரபாண்டி, அமா்சேவா சங்கம் செல்லத்தாய் ஆகியோா் செய்திருந்தனா்.