தென்காசி

ஆலங்குளம் அருகே விபத்தில் இளம்பெண் பலி

DIN

ஆலங்குளம் அருகே மோட்டாா் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள பந்தல் மேடு கிராமத்தை சோ்ந்தவா் காா்த்திக் (30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வேல்மாரி (26). இவா் தனது

சொந்த ஊரான ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கிடாரக்குளத்துக்கு தங்கையின் குழந்தையை பாா்க்க வந்தாராம். வியாழக்கிழமை இரவில்

தங்கையின் கணவா் உதய்காந்த்துடன் மோட்டாா் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தாராம்.

குருவன்கோட்டை அருகே வந்தபோது, வேல்மாரி அணிந்திருந்த துப்பட்டா மோட்டாா் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியது. இதில் மோட்டாா் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. இதில், வேல்மாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்டு திருநெல்வேலி அரசு

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT