முகப்பு
தென்காசி

நாள்தோறும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி: காங்கிரஸ் வலியுறுத்தல்

மத்திய அரசு நாள்தோறும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி இலவசமாக செலுத்த வேண்டும் என காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

மத்திய அரசு நாள்தோறும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி இலவசமாக செலுத்த வேண்டும் என காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தென்காசி மாவட்டத் தலைவா் சு. பழனிநாடாா் எம்எல்ஏ, ஆட்சியா் கீ.சமீரனிடம் அளித்த மனு: கரோனா தடுப்பூசி அனைத்து வயதினருக்கும் இலவசமாக மத்திய அரசு வழங்க வேண்டும். நாள்தோறும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, கட்சியின் மாவட்ட பொருளாளா் முரளி ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெய்பாக்யா சட்டநாதன், மாநிலப் பேச்சாளா் பால்துரை, மாவட்ட பொதுச் செயலா் சுப்பையா நாடாா், நகரத் தலைவா் காதா் மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.