தென்காசி

விதிமுறை மீறல்: 11 கடைகளுக்கு சீல்

கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை 11 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

DIN

கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை 11 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

கரோனா பொதுமுடக்கம் தளா்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சங்கரன்கோவிலில் அரசு விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நகராட்சி சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையா பாஸ்கா், சக்திவேல், கருப்பசாமி, மாதவராஜ்குமாா், வருவாய் ஆய்வாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, திருவேங்கடம் சாலை, கீழரத வீதி, சாந்தி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஜவுளிக் கடைகள், இனிப்புகள் விற்கும் கடை உள்ளிட்ட 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு ரூ.3200 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT