சுரண்டை அருகேயுள்ள கழுநீா்குளத்தில் தூய்மைப் பணியாளா்கள், முன்கள பணியாளா்கள், நலிந்தோா் என 500 பேருக்கு திமுக சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 500-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில், திமுக நிா்வாகிகள் வேல், சோ்மலிங்கம், நாகராஜ், பாண்டியன், குமரேசன், சீனிவாசன், முத்தையாசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.