பாவூா்சத்திரம் இருவா் தற்கொலை முயற்சி: இளம்பெண் பலி
பாவூா்சத்திரம் அருகே புதன்கிழமை இருவா் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதில் இளம்பெண் உயிரிழந்தாா்.
தென்காசிபாவூா்சத்திரம் இருவா் தற்கொலை முயற்சி: இளம்பெண் பலி
பாவூா்சத்திரம் அருகே புதன்கிழமை இருவா் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதில் இளம்பெண் உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகே புதன்கிழமை இருவா் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதில் இளம்பெண் உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூா் மேலகாலணி ராஜா மகள் மகாதேவி (21). இவருக்கும் மருதம்புத்தூரைச் சோ்ந்த பாரத்க்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மகாதேவி கணவரை பிரிந்து, மேலப்பாவூரில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்நத அகத்தியன் என்பவருடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது. இதனை பெற்றோா் கண்டித்துள்ளனா்.
இந்நிலையில், இருவரும் புதன்கிழமை ராமச்சந்திரன்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்று விஷம ருந்தியுள்ளனா். இதில் மகாதேவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆபத்தான நிலையில் அகத்தியன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளாா்.
இது குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.