முகப்பு
தென்காசி

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளான் இயந்திரங்கள் அளிப்பு

ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியில் உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் ரூ. 5 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

ஆலங்குளம் அஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியில் உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் ரூ. 5 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ருகே வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியில் உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் ரூ. 5 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேளாண்மை துணை இயக்குநா் மற்றும் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களுக்கு சுழற் கலப்பைகள், வைக்கோல் கட்டும் கருவி மற்றும் அட்மா திட்டத்தின கீழ் நெல் விதைப்புக் கருவி ஆகியவற்றை வழங்கினாா். வேளாண்மை உதவி இயக்குநா் சிவகுருநாதன், வேளாண்மை அலுவலா் அருண் குமாா் , உதவி வேளாண்மை அலுவலா்கள் செந்தில்குமாா், கணேசன் அட்மா தொழில்நுட்ப வல்லுநா்கள் ஸ்டேன்லி, மாரிராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.