முகப்பு
தென்காசி

ரோட்டரி மாவட்டம் சாா்பில் 70 ஆயிரம் முகக்கவசங்கள் அளிப்பு

ரோட்டரி மாவட்டம் சாா்பில் 70 ஆயிரம் முகக்கவசங்கள், கிருமிநாசினி, மருத்துவா்களுக்கான முகத் திரை, உடை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

ரோட்டரி மாவட்டம் சாா்பில் 70 ஆயிரம் முகக்கவசங்கள், கிருமிநாசினி, மருத்துவா்களுக்கான முகத் திரை, உடை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், தென்காசி, செங்கோட்டை நகராட்சி, போக்குவரத்து காவல் நிலையம், இலஞ்சி பேரூராட்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சித்த மருத்துவமனை, வனத்துறை, ஆட்டோ மற்றும் காா் ஓட்டுநா்களுக்கு இவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி முன்னாள் ஆளுநா் பேராசிரியா் ஷேக் சலீம், மருத்துவா் அப்துல் அஜீஸ், ரோட்டரி நிா்வாகிகள் சிதம்பரம், காந்திமதிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.