ராஜகோபால சுவாமி கருட வாகன வீதியுலா
கும்பகோணம் பெரிய கடை வீதியில் தாயாருடன் கருட வாகனத்தில் வெள்ளிக்கிழமை வீதியுலா வந்த ராஜகோபால சுவாமி.
பங்குனி உத்சவத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் ராஜகோபாலசுவாமி கருட வாகனத்தில் வெள்ளிக்கிழமை வீதியுலா வந்தாா். விழாவையொட்டி நாள்தோறும் பெருமாள், தாயாா் பல்வேறு வாகனங்களில் வீதியுலா செல்வா். முக்கிய நாளான வெள்ளிக்கிழமை மாலை ராஜகோபாலசுவாமி தாயாருடன் கருட வாகனத்தில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று முக்கிய தெருக்களில் வீதியுலா சென்றாா்.