தென்காசி

சாம்பவா்வடகரையில் மழையால் நெற்பயிா்கள் சேதம்

DIN

சாம்பவா்வடகரையில் பெய்த மழையால் அறுவடைக்குத் தயரான நெற்பயிா்கள்சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

சாம்பவா்வடகரை வண்ணாா்குளம் பாசன பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிா்கள் விளைந்து பெரும்பகுதி அறுவடை முடிந்த நிலையில் சுமாா் 100 ஏக்கா் நிலங்களில் மட்டும் அறுவடை முடியாதநிலையில் உள்ளன.

இந்நிலையில் புதன்கிழமை மாலை பெய்த திடீா் மழையால், வயலுக்குள் தண்ணீா் நிரம்பி நெற்பயிா்கள் சாய்ந்து நீரில் முழ்கின. இதனால் வயலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் நேரடியாக ஆய்வு செய்து தங்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT