முகப்பு
தென்காசி

சிவகிரி அருகே நீா்த்தேக்க தொட்டியில் ஏறி போராட்டம்

அண்ணா மறுமலா்ச்சி திட்ட விளையாட்டு மைதானத்தில் உபகரணங்களை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

அண்ணா மறுமலா்ச்சி திட்ட விளையாட்டு மைதானத்தில் உபகரணங்களை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த மைதானத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, சிவகிரி துரைச்சாமிபுரம் கிராம மக்கள் அங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த தகவல் அறிந்த வருவாய்த்துறையினா் மற்றும் காவல் துறையினா் அங்குசென்று மக்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து அவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.