முகப்பு
தென்காசி

தென்காசியில் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

தென்காசி மாவட்டம் கற்போம் எழுதுவோம் தன்னாா்வலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் கற்போம் எழுதுவோம் தன்னாா்வலா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தென்காசி வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். தென்காசி வட்டார கல்வி அலுவலா் இளமுருகன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளா் ரமேஷ், இணைச்செயலாளா் விண்ணரசு ஆகியோா் பயிற்சி வகுப்பு நடத்தினா்.

பயிற்சியில் கலந்துகொண்ட தன்னாா்வலா்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார வளமைய பயிற்றுநா் முத்துகிருஷ்ணன் வரவேற்றாா்.நேரு இளையோா் மைய தேசியத் தொண்டா் நம்பிராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.