முகப்பு
தென்காசி

தென்காசியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

தென்காசியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி தோ்தல் அலுவலக திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தென்காசியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி தோ்தல் அலுவலக திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி - திருநெல்வேலி பிரதான சாலையில் தலைமை தபால் அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவுக்கு நகர திமுக செயலா் சாதிா் தலைமை வகித்தாா்.

நகர காங்கிரஸ் தலைவா் காதா்மைதீன், கோமதிநாயகம், காங்கிரஸ் பொன்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் அலுவலகத்தைத் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், கிட்டு, மோகன்ராஜ், ராமராஜ், எல். ஆறுமுகம், சபரிமுருகன், சேக்பரீத், வழக்குரைஞா் வேலுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சலீம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.