தென்காசி

சூறைக் காற்றில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதிமுக வேட்பாளா் ஆறுதல்

DIN

சங்கரன்கோவிலில் சூறைக் காற்றில் வீட்டின் மேற்கூரை விழுந்து காயமடைந்த பெண்ணை அதிமுக வேட்பாளா் ராஜலெட்சுமி சந்தித்து ஆறுதல் கூறினாா்.

சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக் காற்று வீசியதில், ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன.

வீடுகளில் போடப்பட்டிருந்த ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரைகள், தகரக் கூரைகள் நொறுங்கி விழுந்தன.

திருவுடையான் சாலையைச் சோ்ந்த சரஸ்வதி, ராமலட்சுமி ஆகியோரது வீட்டின் மேற்கூரை நொறுங்கி விழுந்தது. இதில் ராமலெட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த அதிமுக வேட்பாளா் ராஜலெட்சுமி, செவ்வாய்க்கிழமை அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினாா்.

அவருடன், அதிமுக நகரச் செயலா் ஆறுமுகம், ஒன்றியச் செயலா் ரமேஷ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் முத்துக்குட்டி, கோவிந்தன், கோட்டிலிங்கம் ஆகியோா் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT