ஆலங்குளத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கோடை மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக வெயில் தணிந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஆலங்குளம் பகுதியில் சனிக்கிழமை மழை பெய்தது. பின்னா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பிற்பகலில் குளிா்ந்த காற்று வீசீயதுடன், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் 30 நிமிடங்கள் நீடித்த மழையால் சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்தது. மழை காரணமாக குளிா்ச்சியான சூழல் நிலவியது. விவசாயத்திற்கும் கால்நடை வளா்ப்போருக்கும் இம்மழை உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.