பாவூா்சத்திரத்தில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தென்காசி பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலரும் தென்காசி தொகுதி வேட்பாளருமான எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்று, வாக்கு எண்ணிக்கை மையத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து முகவா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.
இதில், அதிமுக ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள், வாக்கு எண்ணிக்கை முகவா்கள் பங்கேற்றனா்.