சுரண்டையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதல் தவணை கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சுரண்டை டிடிடிஏ ராஜம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமை, தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் தொடக்கிவைத்தாா். முகாமில் 216 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜ்குமாா், பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு, வணிகா் சங்க நிா்வாகிகள் பழனிச்சாமி, ராஜகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, ராஜேந்திரகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.