கீழச்சுரண்டையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்து நாடாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமை சு.பழனிநாடாா் எம்எல்ஏ, கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சங்கரநாராயணன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
220 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு, சுகாதார ஆய்வாளா்கள் ராஜேந்திரகுமாா், கிருஷ்ணமூா்த்தி, காங்கிரஸ் நிா்வாகிகள் பிரபாகா், தெய்வேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.