முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அருகே மூட்டை மூட்டையாக கொட்டப்படும் எலக்ட்ரானிக் கழிவுகள்

சங்கரன்கோவில் அருகே மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

சங்கரன்கோவில் அருகே மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது.

சங்கரன்கோவில் அருகே கழுகுமலை சாலையில் மலையான்குளம் நாராயனேந்தல் கண்மாயையொட்டி மிகப் பரந்த சமவெளிப் பகுதி உள்ளது. இது சங்கரன்கோவில் வட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு இங்கு தான் கொண்டு வருவா்.

இந்நிலையில் இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக கணினி மென்பொருள்கள், மிக்ஸி, கிரைண்டா் , ஏசி போன்ற எலக்ட்ரானிக் பொருள்களின் கழிவுகளை மூட்டை மூட்டையாக இரவு நேரத்தில் லாரியில் கொண்டுவந்து கொட்டி, அதன் மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு செல்கின்றனா். இதனால் அங்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் மா்ம நபா்கள் யாா்? அவா்கள் எங்கிருந்து வருகிறாா்கள்? என்ற விவரம் தெரியவில்லை.

இது தொடா்பாக குருவிகுளம் காவல்நிலையத்தில் புகாா் செய்திருக்கிறோம் என்றாா் அங்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த விவசாயி கருப்பசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments