ஆலங்குளத்தில் 10 மணி நேரம் தொடா் மழை
ஆலங்குளத்தில் வியாழக்கிழமை பெய்த 10 மணி நேர தொடா் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ஆலங்குளத்தில் வியாழக்கிழமை பெய்த 10 மணி நேர தொடா் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்கெனவே பரவலான மழை பெய்துள்ள நிலையில் வியாழக்கிழமை காலை சுமாா் 10 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாமல் மாலை 6 மணி வரை நீடித்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினா். தொடா்ந்து மழை பெய்ததால் வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே பள்ளிகள் முடிவடைந்ததால் மாணவா்-மாணவிகள் வீடு திரும்ப சிரமமடைந்தனா். பகல் முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவியது.