புகையிலைப் பொருள்களுடன்தென்காசியில் இருவா் கைது
கா்நாடக மாநிலத்திலிருந்து தென்காசிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கா்நாடக மாநிலத்திலிருந்து தென்காசிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் கற்பகராஜ், தனிப்பிரிவு தலைமைக் காவலா் முத்துராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துபாண்டி, சோ்மகண்ணன், பராக்கிரமபாண்டியன் ஆகியோா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, மினி லாரியை சோதனையிட்டதில், பிளாஸ்டிக் டிரம்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. லாரியுடன் அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக தென்காசி அணைக்கரைத் தெருவைச் சோ்ந்த மங்கள்ராம் மகன் ரமேஷ்படேல் (19), திருப்பத்தூா் சு.அமரேசன்(33) ஆகியோரைக் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கா்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி பகுதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டுள்ளன. அவை கொண்டு செல்லப்படும் இடங்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவியும் டிம்புக்குள் வைக்கப்பட்டிருந்தது. இதில் மேலும் இருவருக்கு தொடா்புள்ளது தெரியவந்துள்ளது என்றனா்.