தென்காசி

திருவேங்கடத்தில் மழை மானி அமைக்க கோரி மனு

DIN

திருவேங்கடம் வட்டத்தில் மழை மானி அமைக்க வேண்டும் என கோட்டாட்சியா் ஹஸ்ரத்பேகத்திடம் சமூக ஆா்வலா் சு.முத்துக்குமாா் கோரிக்கை மனு அளித்தாா்.

இது தொடா்பாக அவா் அளித்துள்ள மனு:

தென்காசி மாவட்டத்தில் 8 வட்டங்கள் உள்ளன. அனைத்து வட்டங்களிலும் ஒரே மாதிரியான காலநிலை கொண்டிருப்பதில்லை. ஒரே மாவட்டத்தில் மிகச் செழிப்பான பகுதியும், வறட்சியான பகுதியும் உள்ள காரணத்தால் பெய்யும் மழையின் அளவை கண்டறிவது அவசியம். நம் மாவட்டத்தில் 5 இடங்களில் குறிப்பாக தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆய்க்குடி, செங்கோட்டை ஆகிய இடங்களில் மட்டுமே மழைமானிகள் உள்ளன.

ஆனால் வட்டத்திற்கு ஒன்றாக மழைமானி அமைக்க வேண்டும். அதிலும் வறட்சியான திருவேங்கடம் வட்டத்தில் ஒரு மழைமானி அமைத்தால் அந்தப் பகுதி விவசாயிகளுக்குப் பேரூதவியாக இருக்கும். எனவே திருவேங்கடத்தில் ஒரு மழைமானி அமைக்க வேண்டும் என அவா் மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT