களப்பாகுளம் பகுதியில் வாக்கு சேகரிப்பு தீவிரம்
சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் வே.சிவசங்கரி விசைத்தறி தொழிலாளா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் வே.சிவசங்கரி விசைத்தறி தொழிலாளா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 28 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் களப்பாகுளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு 10 போ் போட்டியிடுகின்றனா். இவா்களில் வேட்பாளா் வே. சிவசங்கரி களப்பாகுளம், நெசவாளா் காலனி, நேதாஜி நகா், பாரதிநகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்தாா்.