முகப்பு
தென்காசி

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: ஆலங்குளம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

ஆலங்குளம் அருகே செல்லிடப்பேசி உயா் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

ஆலங்குளம் அருகே செல்லிடப்பேசி உயா் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூா் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் செல்லிடப்பேசி உயா் கோபுரம் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது தொடா்பாக அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.