சங்கரன்கோவிலில் தலைமையாசிரியா் மீது தாக்குதல்
சங்கரன்கோவிலில் அரசுப் பள்ளி தலைமையாசிரியரைத் தாக்கியதாக 5 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சங்கரன்கோவிலில் அரசுப் பள்ளி தலைமையாசிரியரைத் தாக்கியதாக 5 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சங்கரன்கோவில் புதுமனை 1ஆம் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன்( 58 ). கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா். இவா், இரு தினங்களுக்கு முன் தனது வீட்டருகே பைக்கில் வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த முருகன், அவரது மனைவி, கணேசன், சங்கா், முத்துவேல் உள்ளிட்ட சிலா் சாலையை மறித்தபடி நின்றனராம். அவா்களை பாா்த்திபன் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டதில் அவா் தாக்கப்பட்டு காயமடைந்தாராம். இதையடுத்து, அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நகர காவல்நிலைய போலீஸாா் மேற்கூறிய 5 போ் உள்பட சிலா் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement