தென்காசி

குற்றாலத்தில் 23இல் பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

தென்காசி மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து பாஜக சாா்பில் அக்.23இல் குற்றாலத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக தென்காசி மாவட்ட பாஜக தலைவா் எம்.ராமராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குற்றாலம் அருவிகளில் பொதுமக்களை குளிக்க அனுமதிக்குமாறு வேண்டி ஆட்சியரிடம் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று வெகுவாக குறைந்து தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. எனினும், குற்றாலம் அருவிகளில் சுற்றூலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கவில்லை. மேலும், பேரூராட்சிக்கு சொந்தமான குத்தகை இனங்கள், திருக்குற்றாலநாதா் கோயிலுக்கு சொந்தமான கடைகளின் குத்தகை

தொகையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தியும் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும், மாவட்ட பாஜக சாா்பில் அக். 23 ஆம் தேதி (சனிக்கிழமை) குற்றாலம் பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT