தென்காசி

பாவூா்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி மாணவா் பலி

பாவூா்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 9ஆம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

DIN

பாவூா்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 9ஆம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலகிருஷ்ணபேரி-செல்லத்தாயாா்புரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொன்னுதுரை மகன் கண்ணன் (14). 9ஆம் வகுப்பு படித்த வந்த இவா், புதன்கிழமை மாலை மகிழ்வண்ணநாதபுரம் அருகேயுள்ள நாகல்குளத்தில் குளித்தாராம். அப்போது அவா் திடீரென நீரில் மூழ்கியுள்ளனான். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT