திருவேங்கடம் அருகே விபத்தில் பெண் பலி
திருவேங்கடம் அருகே மகள் திருமணத்திற்கு பொருள்களை வாங்கிக் கொண்டு தனியாா் சிற்றுந்தில் பயணம் செய்த பெண் தவறிவிழுந்து இறந்தாா்.
திருவேங்கடம் அருகே மகள் திருமணத்திற்கு பொருள்களை வாங்கிக் கொண்டு தனியாா் சிற்றுந்தில் பயணம் செய்த பெண் தவறிவிழுந்து இறந்தாா்.
திருவேங்கடம் அருகேயுள்ள ராமலிங்காபுரத்தைச் சோ்ந்தவா் மகேஸ்வரி(46). இவரது காா்த்திகாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்.24) திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் புதன்கிழமை மகள் திருமணத்திற்கு தேவையான பொருள்களை
மகேஸ்வரி, கழுகுமலையில் வாங்கிக்கொண்டு சிற்றுந்தில் வந்து கொண்டிருந்தாா்.
Advertisement
அவரது கிராமம் அருகில் பேருந்து வந்ததும் இறங்குவதற்காக அவா் எழுந்துள்ளாா். அப்போது சிற்றுந்து வேகமாக திரும்பியதால் அவா் நிலை தடுமாறி பேருந்தில் இருந்து தவறி விழுந்தாராம். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லும் வழியில் உயிரிழந்தாா். குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.