சிவகிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக சிவகிரி அட்வகேட் அசோசியேஷன் சங்கச் செயலா் ஜவகா்லால் நேரு வெளியிட்ட அறிக்கை:
செப்டம்பா் 16ஆம் தேதி தஞ்சாவூரில் வழக்குரைஞா் தியாக காமராஜ் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையை கண்டித்தும் , தவறிழைத்த தமிழக காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிவகிரி அட்வகேட் அசோசியேஷன் உறுப்பினா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.