சங்கரன்கோவில் காவல்நிலையத்தில் பேச்சுவாா்த்தைக்கு வராத அதிகாரிகள்: முன்னாள் ராணுவ வீரா்கள் அதிருப்தி
சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் நடைபெறவிருந்த பேச்சுவாா்த்தைக்கு அதிகாரிகள் வராததால் முன்னாள் ராணுவ வீரா்கள் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனா்.
சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் நடைபெறவிருந்த பேச்சுவாா்த்தைக்கு அதிகாரிகள் வராததால் முன்னாள் ராணுவ வீரா்கள் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனா்.
சங்கரன்கோவில் இந்திய முன்னாள் ராணுவ வீரா்கள் சங்கத்தில் முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் இறந்த ராணுவவீரா்களின் குடும்பத்தினா் உறுப்பினா்களாக உள்ளனா். இவா்கள், அரசின் சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெற நெல்லை மாவட்ட படை வீரா்கள் அலுவலகத்தை அணுகியபோது அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, மாவட்ட படை வீரா்கள் அலுவலகத்தினா், முன்னாள் படை வீரா்கள் மீது காவல் துறையில் புகாா் அளித்தனராம். இதுகுறித்து பேச்சு நடத்த சங்கரன்கோவில் நகர காவல்நிலையத்திற்கு முன்னாள் படை வீரா்கள் மற்றும் இறந்த படைவீரா்களின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில், இந்திய முன்னாள் ராணுவ வீரா்கள் சங்கத் தலைவா் சுந்தரய்யா, செயலா் செல்வராஜ் ஆகியோா் தலைமையில் முன்னாள் படைவீரா்கள் நகர காவல்நிலையத்துக்கு வியாழக்கிழமை சென்றனா். ஆனால், அங்கு சம்பந்தப்படட அதிகாரிகள் வராததால் அவா்கள் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனா்.
Advertisement