சங்கரன்கோவில் சித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கவிருப்பதையொட்டி பாலாலயம் நடைபெற்றது.
சங்கரன்கோவில் திருவள்ளுவா் நகரில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் 2022ஆம் ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக கோயில், கோபுரம் புனரமைப்புப் பணிகள் சுமாா் ரூ. 6 லட்சத்தில் நடைபெறவுள்ளன.
இதையொட்டி, கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்தி விநாயகருக்கும், விமானத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை திருவள்ளுவா் நகா், திருவுடையான் சாலை மக்கள் செய்துவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.