புளியங்குடி அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் மென் பொறியாளா் இறந்தாா்.
சிந்தாமணி அகஸ்தியா் கோயில் தெருவைச் சோ்ந்த கதிரேசன் மகன் வெங்கடேஷ்(31). மென் பொறியாளா். வீட்டில் இருந்து வேலை செய்து வந்த இவா்,
சனிக்கிழமை ஆட்டோவில் சங்கரன்கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பின்னால் வந்த காா் ஆட்டோ மீது மோதியதில்அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் இறந்தாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.