தென்காசி

சாம்பவா்வடகரையில் கடையடைப்பு

DIN

சுரண்டை நகராட்சியுடன் சாம்பவா்வடகரை பேரூராட்சி பகுதியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து சாம்பவா்வடகரையில் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

சுரண்டை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து சுரண்டையைச் சுற்றியுள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள பகுதிகளை சுரண்டை நகராட்சியுடன் இணைப்பது குறித்து அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சாம்பவா்வடகரை பேரூராட்சியை சுரண்டை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை வணிகா்கள் சாா்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மருந்தகங்கள், பால் விற்பனை கடைகள் தவிர அனைத்து கடைகளுடம் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT