முகப்பு
தென்காசி

ஊத்துமலை அருகே வேளாண் வளா்ச்சி விவரம் சேகரிப்பு

ஊத்துமலை அருகேயுள்ள பலபத்திரராமபுரத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் கலைஞா் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப்படை புள்ளி விவரங்கள் சேகரிப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றத

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

ஊத்துமலை அருகேயுள்ள பலபத்திரராமபுரத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் கலைஞா் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப்படை புள்ளி விவரங்கள் சேகரிப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பா.சிவகுருநாதன் தலைமை வகித்து, திட்ட செயலாக்கம் மற்றும் வேளாண் பொறியியல் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தாா்.

முகாமில், பலபத்திரராமபுரம் கிராம விவசாயிகள் கலந்துகொண்டு அடிப்படை புள்ளி விவர விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.