முகப்பு
தென்காசி

சுரண்டை அரசுக் கல்லூரியில் 16இல் மாணவா் சோ்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு இறுதி கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (செப்.16) நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு இறுதி கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (செப்.16) நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ரா.ஜெயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான அனைத்து இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான இறுதி கட்டக் கலந்தாய்வு வரும் 16ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

முதுகலை மாணவா் சோ்க்கை: கல்லூரியில் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கு அனைத்து முதுகலை மாணவா் சோ்க்கைக் கான முதல் கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமை (செப்.13) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. மேற்கண்ட கலந்தாய்வுகளில் விண்ணப்பித்த மாணவா்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.