தென்காசி மாவட்டத்தில் 7,832 போ் மனு தாக்கல்
தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 2,284 பதவிகளுக்கு 7,832 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 2,284 பதவிகளுக்கு 7,832 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் வரும் அக். 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், மாவட்டத்திலுள்ள ஆலங்குளம், கடையம், கடையநல்லூா், கீழப்பாவூா், குருவிகுளம், மேலநீலிதநல்லூா், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா், செங்கோட்டை, தென்காசி ஆகிய 10 ஒன்றியங்களில் உள்ள 221 ஊராட்சித் தலைவா் பதவிக்கு 1355 பேரும், 1905 உறுப்பினா் பதவிக்கு 5,497 பேரும், 144 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 878 பேரும், 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 102 போ் உள்பட மொத்தம் 7,832 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.