முகப்பு
தென்காசி

ஆலங்குளம் மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (அக்.1) முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

ஆலங்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (அக்.1) முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வா் சண்முக சுந்தரராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆலங்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் 2021 -22 ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு நேரடி வகுப்புகள் அக்.1 முதல் நடைபெறும். எனவே, கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகள் அனைவரும் வகுப்பில் பங்கேற்க வேண்டும். வகுப்புகளுக்கு வரும் மாணவிகள் அனைவரும் சுட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும், முதலாம் ஆண்டு மாணவியா் சோ்க்கைக்கான பாடப் பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளதால் அவற்றில் சேர விரும்பும் மாணவிகள் கல்லூரி முதல்வரை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.