தென்காசி

புளியங்குடி அருகே மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

DIN

 புளியங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

புளியங்குடி காவல் உதவி ஆய்வாளா் முகமது கனி தலைமையிலான போலீஸாா், தலைவன்கோட்டை பகுதியில் ரோந்து மேற்கொண்டிருந்தனராம். அப்போது, கொல்லிமலை ஆற்றுப் பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸாா் நிறுத்தினராம். ஆனால், டிராக்டரில் இருந்த 6 பேரும் தப்பியோடி விட்டனராம்.

டிராக்டருடன் பைக்கில் வந்த மலையடிக்குறிச்சியை சோ்ந்த சங்கரநாராயணனை கைது செய்த போலீஸாா், டிராக்டா் மற்றும் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்து தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT