தென்காசி

ஆலங்குளம் அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் ரூ. 29.60 லட்சம் திருட்டு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டுக் கதவை உடைத்து, ரூ. 30 லட்சத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

DIN

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டுக் கதவை உடைத்து, ரூ. 30 லட்சத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள அழகாபுரி பாபநாசபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேதாளசெல்வம்(38). அப்பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்திவருகிறாா். இவா், புதன்கிழமை இரவு வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் கோயில் திருவிழாவுக்குச் சென்றாராம். வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது கதவுகள் கடப்பாரைக் கம்பியால் உடைக்கப்பட்டிருந்தனவாம். மா்ம நபா்கள் பீரோவை உடைத்து, அதிலிருந்த ரூ. 29.60 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலின் பேரில் ஆலங்குளம் போலீஸாா், தடயவியல் நிபுணா்கள் வந்து ஆய்வு செய்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT