முகப்பு
தென்காசி

தென்காசியிலிருந்து நெல்லைக்குகூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:04 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி-திருநெல்வேலி வழித்தடத்தில் உள்ள பாவூா்சத்திரத்திலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் தென்காசி, திருநெல்வேலிக்கு பேருந்தில் பயணம் செய்து வருகின்றனா். சில மாதங்களாக இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, பயணிகள் அதிருப்தியும், புகாரும் தெரிவிக்கின்றனா். காலை, மாலை நேரங்களில் மட்டுமன்றி பகலிலும் பேருந்துக்காக 30 முதல் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, இவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலரும் ஒன்றியக்குழு உறுப்பினருமான இராம. உதயசூரியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.