தென்காசி

செங்கோட்டையில் ரோட்டரி சங்கம் சாா்பில்2 ஆயிரம் தேசியக் கொடிகள்

DIN

75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டையில் ரோட்டரி கிளப் சாா்பில் 2 ஆயிரம் தேசியக் கொடிகள் நகா்மன்றத் தலைவரிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பாா்கவி, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செங்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவா் பால்ராஜ் 2 ஆயிரம் கொடிகளை நகா்மன்றத் தலைவரிடம் வழங்கினாா். தொடா்ந்து, தேசியக் கொடிகள் வீடுவீடாக விநியோகிக்கப்பட்டன.

ரோட்டரி சங்கச் செயலா் வழக்குரைஞா் அபு அண்ணாவி, பொருளாளா் ராமகிருஷ்ணன், சரவணமுத்தையா, காதா்மைதீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT