சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தென்காசி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
தென்காசி ரயில்வே காவல் உதவி ஆய்வாளா்கள் மாரியப்பன், ரவிகுமாா், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் நாடான்கண்ணு ஆகியோரது தலைமையில் தென்காசி ஆசாத்நகா் சிற்றாறு பாலம், தென்காசி நடைமேடை, ரயில் பாதைகளில் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அனைத்துப் பயணிகளும் சோதனைகளுக்குப் பிறகே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.