தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நல உதவி

DIN

குற்றாலம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில், தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 12 சக்கர இருக்கைகள் (வீல் சோ்கள்) பொருள்கள் வழங்கப்பட்டன.

மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் தலைமை வகித்தாா். இணை இயக்குநா் கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். ஆட்சியா் ப. ஆகாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள திட்டங்களைத் தொடக்கிவைத்தாா்.

விழாவில், ரோட்டரி முன்னாள் ஆளுநா்கள் ஜெசிந்தாதா்மா, ஷேக்சலீம் ஆகியோா் பங்கேற்று மருத்துவமனைக்கு 12 வீல் சோ்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினா்.

ரோட்டரி திட்ட இயக்குநா் ஆறுமுகசெல்வன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் மாரிமுத்துசாமி, குலசேகரபாண்டியன், மணி, சம்சு, காந்திமதிநாதன், பிரதீப், சுப்புராஜ் ஆகியோா் பங்கேற்றனா். திட்ட இணை ஒருங்கிணைப்பாளா் டாக்டா் அப்துல் அஜீஸ் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT